மதுரையைச் சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் ஒருவர் அனுப்பிய நன்றி கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்த தேசியமணி, பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பெற்ற கடனில், தனது பெட்டிக்கடையை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, அவரது கடிதத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி, திட்டம் அவரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவரது நேர்மை மற்றும் கடின உழைப்பைப் பாராட்டி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பதில் கடிதம் தனது வாழ்வின் பொக்கிஷம் என்றும், மறக்க முடியாத சாதனையாக கருதுவதாகவும் தேசியமணி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
















