தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு விடுவிக்கப்பட்டு பிரசாந்த் வடநரேவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக செயல்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வடநரே, தற்போது நீர்வளத்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பணியிடம் ஏதும் ஒதுக்கப்படவில்லை.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவும் சூழலில், நீர்வளத்துறை செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
















