கர்நாடக அரசின் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு குடிநீர் கூட கிடைக்காது எனக் கூறப்படும் நிலையில் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக சார்பில் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை கண்டன பேரணி நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
















