சிஜேபி அமைப்பின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி துறையில் புகார் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் திவாரி அளித்துள்ள மனுவில், சிஜேபி அமைப்பின் பதிவு நிலை, சட்டப் பாதுகாப்பு நிதி, நிறுவனர் அபிஜீத் திப்கேவின் குடும்பத்தின் நிதிப் பின்னணி, நிதி திரட்டும் நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மை ஆகியவை குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவல்துறை வழக்குகளை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்களுக்கான சட்ட உதவிக்காக கபில் சிபல் அறிவித்த ஒரு கோடி நிதி வாக்குறுதி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
















