பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டினைக் குறைத்து, நமது நாட்டு இளைஞர்களின் வளமான எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில், “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான, போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan)” என்ற பிரச்சாரத்தை இன்று துவங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி
இன்று முதல் இனி வரும் 100 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறவிருக்கும், போதைப் பொருளுக்கு எதிரான இந்த நாடு தழுவிய பிரச்சாரத்தில் அனைத்து இளைஞர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்களின் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போதையை ஒழிப்போம்! நமது இளைஞர்களுக்கு நல்ல பாதையை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தள்ளார்.
















