கர்நாடக மாநிலம் மைசூரில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விவரிக்கும் கலாசார இளைஞர் மையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
சுவாமி விவேகானந்தர் கடந்த 1892-இல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மைசூருக்கும் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் கலாசார இளைஞர் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவையொட்டி, வருகை தந்த பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் உருவபடம் முன் மனமுருகி வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்று நட்டு அதற்கு பிரதமர் மோடி தண்ணீர் ஊற்றினார். மேலும், ஒவ்வொரு வளாகமாக சென்ற பிரதமர் மோடி, அங்கு தத்ரூபமாக நிர்மாணிக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பக்தி பரவசத்துடன் வழிபட்டார்…
பின்னர், சுவாமி விவேகானந்தரின் போதனைகளைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்குள்ள நினைவுக்குறிப்பேட்டில் தனது நினைவை பகிர்ந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவபடத்துக்கு பிரதமர் மோடி மலர்தூவி மனமுருகி பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் துறவியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், கலாசார மையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த நிலையில், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி அதன் நிர்வாகிகள் கெளரவித்தனர்.
















