ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த 2 வாரங்களாகத் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவும் – இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இதனையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய கமேனி, பொதுவெளியில் தோன்றாமல் பதிவு செய்யப்பட்ட காணொலியின் மூலமே பேசினார்.
முன்னதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகள், முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருதி கமேனி இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கமேனியின் வயதை கருத்தில் கொண்டு நாட்டிற்கான அடுத்த உச்சதலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.