போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில திரைப் பிரபலங்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் கிருஷ்ணாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், நண்பர்களுடன் அவர் நடத்திய உரையாடலை மீட்டெடுத்தனர்.
அதில் அவர் CODE WORDஐ பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் குழுவில் உள்ள நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதில் சில திரை பிரபலங்களும் இருப்பதால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.