வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டது.
அதன் பின் பேட்டியளித்த அவர், அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு இடையே 70 கிலோ மீட்டர்த் தூரத்திற்கு உள்ள இருப்பு பாதையை இருவழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்த பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், வாலாஜாபாத் ரயில்வே முனையம் 7 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் 680 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளதாக கூறினார். மேலும், வாலாஜாபாத் ரயில்வே முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.