முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்த கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னைச் சேப்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்கள் சிலர் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்தனர்.
கைக்குட்டையில் அச்சிடப்பட்டிருந்த விஜய்யின் புகைப்படத்தை மாணவர்கள் காண்பித்ததால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த போலீசார், 2 மாணவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.