சென்னை ஐஐடியில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரத்தில், வளாகத்தில் உள்ள உணவக ஊழியரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐஐடி-யில் படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர், நேற்றிரவு ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியே கையில் கட்டையுடன் வந்த நபர், அந்த மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சத்தமிட்ட அந்த மாணவி, தப்பியோடி காவலாளிகளிடம் கூற, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்த் தப்பி சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த உணவக ஊழியர் ரோஷன் குமாரைக் கைது செய்தனர்.