திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அதனைச் சாப்பிட்ட 4 மாணவர்களை, ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்காக, காங்கேயம் பகுதியில் இருந்து உணவு தயார்ச் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் கொழிஞ்சிவாடி பள்ளிக்கு வந்த சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டறிந்த பள்ளி ஆசிரியர்கள், 4 மாணவர்களைத் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.