சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நைஜீரிய பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25ம் தேதி கொக்கைன் விற்பனைச் செய்ததாக போதப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ராயப்பேட்டைப் பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான நைஜீரியாவைச் சேர்ந்த தாரா சுமாமோவைச் சூளைமேடு போலீசார்க் கைது செய்தனர்.