ஈரான், இஸ்ரேலில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்படி, ஆபரேஷன் 3 இந்திய போர் விமானங்கள் உள்பட 19 சிறப்பு விமானங்கள் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 415 இந்தியர்கள் தாயகம் திரும்பியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.