தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் உரிய விலை இல்லாததால், மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டதால் பழுத்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குருவியம்மாள்புரம், குறும்பபட்டி, ரெங்கசமுத்திரம், வண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. இந்த நிலையில், உரிய விலை கிடைக்கவில்லை என்றும், ஒரு கிலோ மாம்பழத்தை 2 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் விலைக்கு கேட்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.