தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருக்கும் இ.டாய்லெட்டை நெடுஞ்சாலை துறையினர், மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தாம்பரம் பகுதியில், நடை மேம்பாலத்தை ஒட்டி உள்ள பகுதியில் எலக்ட்ரானிக் டாய்லெட் என்ற இ டாய்லெட் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை திறக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.