திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்து 250 ஊழியர்கள், 212 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சேர்ந்தவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 50 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேசன் கடைகளில் செயல்படுத்தப்படும் ப்ளூடூத் முறையை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கங்களை எழுப்பினர்.