தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இரவு நேரத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் அடிக்கடி சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை புலிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து கோழிகள் மற்றும் நாய்களை தூக்கிச் செல்வதும் தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாக ஊருக்குள் நடமாடும் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.