இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரசை எதிர்த்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக பாஜகவின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன் தலைமையில் பாஜகவின் 11 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் மற்றும் அவசரநிலை பிரகடன அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸை எதிர்த்த பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மாணவ, மாணவியர்கள் என பலரும் பல்வேற்கு கொடுமைகளுக்கு ஆளானதாக தெரிவித்தார்.