சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.
சென்னைக் கிண்டி ஐஐடி வளாகத்தில் பயிலும் மாணவிக்குக் கடந்த வியாழக்கிழமை வடமாநில இளைஞரான ரோஷன் குமார் என்பவர்ப் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர்க் காவல் நிலைய போலீசார், வடமாநில இளைஞரான ரோஷன் குமாரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் செய்தித்தாள்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயரத்தினகுமார்த் தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?, குற்றம் சாட்டப்பட்டவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாணவிக்கு மருத்துவ பரிசோதனைச் செய்யப்பட்டதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.