காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உண்டியலில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப்புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் 33 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் முக்கிய நுழைவாயிலின் அருகே வைக்கப்பட்டிருந்த திருப்பணி உண்டியலில் திடீரென புகை வெளியாவதை அறிந்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக அதனை திறந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இது குறித்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.