தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பம் கிடையாது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகி சுப்பிரமணியத்தின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
மா விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுகுறு தொழில்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
மருத்துவர் காலி பணியிடங்களைத் திமுக நிரப்பவில்லை என்று குற்றம் சாட்டியவர், தமிழகத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பம் கிடையாது என்றும் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் மக்கள் விரோதத் திமுகவை அகற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டியவர், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலமிழந்து கொண்டிருக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.