அதிநவீன ஃபைபர் – ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம் உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் ஒரு வினாடிக்கு 1 மில்லியன் GBPS வேகத்தில் இண்டெர்நெட் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மிக வேகமாகப் பதிவிறக்கவும், இணைய தகவல்களை உடனடியாகப் பெறவும் முடியும் என்று கூறப்படுகிறது.
சோதனையில் உள்ள இந்தக் கண்டுபிடிப்பு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.