சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் - 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!
Jun 29, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 29, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் என்பவர் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர், அஜித்குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்கிங்கில் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

பின்னர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதாக தெரிகிறது. இது குறித்து நிக்கி அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், காவல் நிலையத்தில் னது சகோதரரை போலீசார் கடுமையாக தாக்கியதாக வேதனை தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும்போதே வாகனத்தில் வைத்து 5க்கும் மேற்பட்ட காவலர்கள் தனது சகோதரரை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்பி ஆஷித் ரவத் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தவும் எஸ்பி ஆணையிட்டுள்ளார்.

Tags: Six policemen suspendedyouth dead in police stationMadhapuram Pathira Kaliamman Temple iAjith kumarsivaganga
ShareTweetSendShare
Previous Post

2036 இந்தியாவில் ஒலிம்பிக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு?

Next Post

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் – பக்தர்கள் பரவசம்!

மும்பையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலி பெருக்கிகள் அகற்றம்!

திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்புவனத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – நயினார நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை!

வேலூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி!

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி!

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் – சீமான்

சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் – ஜூலை மாதத்திற்குள் முடிக்க மாநகராட்சி முடிவு!

அண்ணா பல்கலைக் கழக மாணவியை புகைப்படங்களை காட்டி அச்சுறுத்தியதாக புகார் – முன்னாள் காதலன் கைது!

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies