பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கான பரிந்துரை கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் கூறினார்.