வேலூர் அருகே மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தில் 2 சொகுசு கார்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வேலூர் அடுத்த பொய்கை பகுதியில் எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காக திரும்பியதால் சாலையோரம் இருந்த காலி இடத்தில் லாரி சிக்கியது. அப்போது மேலே சென்ற மின்கம்பி உரசியதில் லாரியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.