தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வருசநாடு வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வறண்டு கிடந்த கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.