தாராபுரம் அருகே தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த கிடந்த தொழிலாளி, கொலை செய்யப்பட்டாரா என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சென்னாங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 26-ம் தேதி மேட்டுக்காட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன், மனஅழுத்தம் காரணமாக உயிரை மாய்த்தக் கொண்டதாக அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், முருகனின் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.