சென்னை தரமணி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செம்மஞ்சேரியில் உள்ள பணிமனை அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித்தார்.
அப்போது அவர் கூறியதைக் கேட்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனை அடைந்த மாற்றுத்திறனாளி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.