மேட்டூர் அணையிலிருந்து திப்பம்பட்டி உபரி நீர் நீரேற்று மூலம் 100 ஏரிகள் திட்டத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து விநாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் படி, திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பும் பணியை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதை ஆட்சியர் பிருந்தா தேவி, விவசாயிகளுடன் பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றனர்.