கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கங்கதேவா கோயிலுக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என நல்லூர் உட்பட 5 கிராம மக்கள், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.