திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்பி ஆஷித் ரவத் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தவும் எஸ்பி ஆணையிட்டுள்ளார்.