சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தைக் கண்டித்த கொல்கத்தாவில் பாஜகவினர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கஸ்பா நகரில் உள்ள கொல்கத்தா சட்டக் கல்லூரியில் படித்து வரும் 24 வயதான மாணவி கடந்த 25ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரி முன்னாள் மாணவரும் ஆளும் திரிணாமுல் காங்கிரஷ் மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் சட்டக்கல்லூரியின் காவலாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் கண்டன பேரணி நடத்தினர்.
அப்போது கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.