பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்குத் தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியா மீது பழி சுமத்தப்பட்ட நிலையில், தாலிபான் தீவிரவாத இயக்கம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.