தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோயில் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலவயலி கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாகப் பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வந்த நிலையில், சமாதான கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில்,கோயில் கருவறையில் உள்ள பீரோ சாவியைத் தனிநபர் எடுத்து வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், சாவியை வழங்கக் கோரி கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி செங்கோட்டு வேலவன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.