கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உரிய அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாகக் கனிம வளங்கள் கொண்டு சென்ற 5 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி வழியாகக் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் வாகன தணிக்கை நடைபெற்றது.
அப்போது அளவுக்கு அதிகமாகக் கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஓட்டுநர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.