தஞ்சை அருகே சக மாணவியுடன் பேசியதைப் பார்த்த ஆசிரியர் தரக்குறைவாகப் பேசியதால் மனம் உடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் ஒரே மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவர் எழுதிய கடிதத்தில், வகுப்பறையில் தனது பள்ளித் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்த 11ஆம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்து கொண்டு சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் விதமாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரைக் கைது செய்யும் வரை மாணவரின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.