கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்து சேவையை மீண்டும் கொண்டுவரக்கோரி கிராம மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குன்னூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கரிமொரஹட்டி கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து கடந்த 2020 மற்றும் 21ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகளால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் பேருந்து சேவையைக் கொண்டுவர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.