சிவகங்கையில் காவல்துறையினரின் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டுள்ளது.
மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித் என்ற இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல்நிலையத்தில் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியாகிளாட் முன் வழக்கறிஞர்கள் இருவர் முறையீடு செய்தனர்.
அப்போது கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் இறப்புகள் நடந்துள்ளதாகவும், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா? என்றும் காவல்துறைக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவாகப் பதிவு செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.