மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகே திருப்பதி என்பவர் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த சிலர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.
கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதால் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்த நிலையில், வியாபாரிகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்து வணிகர்களும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலூர் பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.