ரயில் கட்டண உயர்வு - நள்ளிரவு முதல் அமல்!
Oct 2, 2025, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வேதுறை அறிவித்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம், பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிலோமீட்டர் வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை.

500 முதல் ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 ரூபாயும்,
ஆயிரத்து 501 முதல் இரண்டாயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும்,
இரண்டாயிரத்து 501 முதல் மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு நடைமுறையும் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 15ஆம் தேதி முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் அவசியம் என்றும், இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இன்று முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்கத் தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Tags: indian railwaysRailway MinistryRailway fare hike
ShareTweetSendShare
Previous Post

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

Next Post

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Related News

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies