பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில் நிலையத்திற்கு வெளியே மழைநீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
வட மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
அதேபோல் பாட்னாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கியது. இதனால் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.