பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
டென்மார்க்கில் இதுவரை விருப்பத்தின் பேரிலேயே யாரையும் ராணுவத்தில் சேர்க்க முடியும். ஆனால், இனி 18 வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் தங்களது பெயர்களை ராணுவப் பணிக்குக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அவர்களில் விருப்பமுடையவர்களுக்கு முதலிலும், விருப்பம் தெரிவிக்காதவர்கள் குலுக்கல் முறையிலும் ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.