பிரிட்டனில் 1869-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா்.
அரசி விக்டோரியாவின் பயணத்துக்காகச் சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத் தற்போது தொடர்வதற்கு அதிக செலவு பிடிப்பதாலும், பழைய தொழில்நுட்பங்களைக் கைவிட்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்புவதாலும் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.