டெல்லியில் முகாம் அலுவலக திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற பூஜையில், அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லி முதல்வரின் செயல், மக்கள் பிரச்சனைகள் மீது தீவிர கவனம் செலுத்தப்படுவதைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
டெல்லி மக்களின் பிரச்சனைகள் மற்றும் துன்பங்கள், வரும் காலங்களில் முதல்வரின் இல்லத்திலிருந்தே தீர்க்கப்படும் எனவும் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.