2025-ம் ஆண்டுக்கான டுராண்ட் கோப்பை போட்டியின் கோப்பைகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்து வெளியிட்டார்.
பிரபல கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பை போட்டியானது வரும் 23-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிக்கான கோப்பைகளைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்து வெளியிட்டார்.
பின்னர் நிகழ்வில் பேசிய அவர், ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் குழு ஒற்றுமையை விளையாட்டு ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.