கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, F-35 ஜெட் விமானத்தின் சமீபத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் 14-ம் தேதி பழுது காரணமாக F-35 ஜெட் விமானம் அவசர அவசரமாகத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் இந்த வார இறுதிக்குள் நேரில் வருகை தந்து, பழுதை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு விமானத்தை எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.