கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், மீண்டும் பெய்த மழை காரணமாக நீர்வரத்து 46 ஆயிரத்து 147 கன அடியில் இருந்து 46 ஆயிரத்து 915 கன அடியாக அதிகரித்துள்ளது.