ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி தேரோட்ட விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.