கர்நாடக மாநிலம் மண்டியாவில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சிவல்லியில் இருந்து பாண்டவபுராவுக்கு சென்ற கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.